states

img

ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க மோடி அரசு தீவிரம்

ஜார்க்கண்ட் மாநிலத் தில் ஆட்சியை கவி ழ்க்கும் முனைப்பில் மோடி அரசு, கடந்த ஜனவரி 31  அன்று “இந்தியா” கூட்டணியில்  அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் கட்சி யின் தலைவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான  ஹேமந்த் சோரனை நிலக்கரி சுரங்க மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறி முதல்வ ராக இருந்த பொழுதே அமலாக் கத்துறை மூலம் கைது செய்து சிறையில் அடைத்தது.

எனினும் ஜேஎம்எம் - காங்கி ரஸ் கூட்டணி துரிதமாக செயல் பட்டும், பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடித்து, ஜேஎம்எம் மூத்த தலைவரான சம்பாய் சோரனை முதல்வராக அமர்த்தி ஆட்சி பாஜக கைக்கு செல்லாமல் தடுத்தது. 

இந்நிலையில், ஜார்க்கண் டில் ஆட்சியை கவிழ்க்க பாஜக  அடுத்தக் கட்ட சதியில் இறங்கி யுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்ச ருமான ஆலம்கீர் ஆலமிற்கு அம லாக்கத்துறை மூலம் மோடி அரசு  சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த  வாரம் ஆலமின் தனிச் செயலா ளர் சஞ்சீவ் லால் மற்றும் அவர்  களுடன் தொடர்புடைய குடி யிருப்பில் இருந்து ரூ.32 கோடி  ரூபாய்க்கும் அதிகமான பணம்  கைப்பற்றப்பட்டதாக அமலாக்  கத்துறை கூறிய நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை மே 14 அன்று ஆஜராகுமாறு சம்ம னில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலமை சிறையில் அடைத்து ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி
ஹேமந்த் சோரன் கைது நட வடிக்கையின் பொழுது பாஜக வின் குதிரை பேரம், சம்பாய் சோர னின் பதவியேற்புக்கு ஆளுநர் செய்த சதி உள்ளிட்டவைகளை முறியடித்து ஜார்க்கண்ட்டில் மீண்டும் காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஆட்சி அமைக்க பெரி தும் உதவியவர் ஆலம்கீர் ஆலம்  (70). சம்பாய் சோரன் முதல்வ ராக இருந்தாலும், முக்கிய நிர்வா கப் பொறுப்புகளை ஆலம்கீர் ஆலம் கவனித்து வருகிறார். மேலும் ஆட்சியை கவிழ்க்கும் முனைப்பில் பாஜகவின் ஆள்  பிடி வேலையை சுக்குநூறாக நொறுக்கி இன்று வரை ஜார்க் கண்டில் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை காப்பற்றி வருகிறார். இதனால் தான் ஆலம்கீர் ஆலமை சிறையில் அடைத்து ஜார்க்கண்டில் ஆட்சி யை கவிழ்ப்பு வேலையை துவங்க மோடி அரசு கணக்குப்  போட்டுள்ளது. இதன் வெளிப் பாடே ஆலம்கீர் ஆலமிற்கு அம லாக்கத்துறை அனுப்பிய சம்மன் ஆகும்.